Tuesday, July 29, 2008

அன்பு கண்ணீர்...

நான் கண்ணீர் விட்டேன் என்பதற்காக

என்னை விட்டு விலகி செல்கின்றாய்

நான் உன் அன்புக்காக ஏங்கி

கண்ணீர் விட்டேன் என்பதை ஏனோ

நினைக்க மறுக்கின்றாய்

நேசிக்கின்றேன்...

நான் உன்னை யாசித்து யாசித்து

நேசிக்கின்றேன் ... நீயோ

யோசித்து யோசித்து நேசிக்கின்றாய் பின்பு

வெறுத்து ஒதுக்குகின்றாய்

வாழ்க்கை சோலையில்!

உன் பரப்பான வாழ்க்கை சோலையில்

வாரகடைசியில் கூட

சில மணி துளிகள்தான்

என் மீது அன்பு செலுத்துக்கின்றாய்

நேரம் இருந்தால்

அகற்றப்படுகிறேன்....

நீ போட்டு வைத்த வட்டத்தினுள்

அத்துமீறி நுழைந்தல் என்னவோ

அடிக்கடி உன் இதயத்தில் இருந்தும்

அகற்றப்படுகிறேன் ஆக்கிரமிப்பாலனாய்

என்ன சொல்ல நான்...

உன் தவறுகளுக்கு நீ ஆயிரம்

காரணம் சொல்லலாம்

என் அன்பிற்கு என்ன சொல்ல நான்!

இருமடங்காய்

நான் உன் மீது காட்டும் அன்பு

இருமடங்காய் பெருகி திரும்ப

கிடைக்க நீ ஒன்றும்

வட்டிகடையோ வங்கியோ அல்ல

நான் ஒன்றும் பணத்தை விதைக்கவில்லை

என் மனதைத்தான் விதைக்கிறேன்

தோல்வி

தோல்வி ஒன்றும் புதிது

அல்ல எனக்கு

காதலில் தோற்பதை தவிர

நம் நட்பு

என் வாழ்வின் மறக்கமுடியா நாளில்

ஊசல் ஆடிகொண்டிருந்தது

நம் நடப்பு.......

காத்திருப்பு

உனக்காக நான் காத்திருக்கின்றேன்

எப்போதும் ஆனால் உன்னிடம் உள்ள

காத்திருப்போர் பட்டியலில்

கடைசியாய் நான்!...

Monday, July 28, 2008

ஆல மரமாய்...

ஒரு வருட நம் நேசம்

ஆல மரமாய் வளராமல்

மழையால் முளைத்த

காலனாய் மறைகின்றது.

வெறுக்கிறாய்

வேதனை படுத்துக்கின்றவர்கலையே

நீ நேசிக்கிறாய்!

ஆனால் நீ ஆனந்தமாய் இருக்க வேண்டும்

என்று நான் நினைப்பதால் என்னோவோ

நீ வெறுக்கிறாய்.

வாழ்ந்து கொண்டிருகிறாய்

நீ என்னை விட்டு விலகி சென்றலும்

நீ என்னை விட்டு மறந்து சென்றலும்

நீ என்னுள் வாழ்ந்து கொண்டிருகிறாய்